உடுமலை அருகே சின்னாறு வனப்பகுதியில் தீத்தடுப்பு விழிப்புணர்வு முகாம்

வனப்பகுதி, குடியிருப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால் முதல் கட்டமாக தீயை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து தீயணைப்பு துறை வீரர்கள் மூலம் செயல்விளக்கம் அளிக்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள சின்னாறு வனப்பகுதியில் வனச்சரகர் சிவக்குமார் ஏற்பாட்டில் கோடந்தூர், பொற்பாற்குடி, ஆட்டுமலை உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட மலைவாழ் கிராம மக்களுக்கு உடுமலை தீயணைப்புத்துறை சார்பில் கோடைகாலத்தில் ஏற்படும் காட்டுத் தீ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் வனப்பகுதி, குடியிருப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால் முதல் கட்டமாக தீயை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து தீயணைப்பு துறை வீரர்கள் மூலம் செயல்விளக்கம் அளிக்கப்பட்டன.



வனப்பகுதியில் எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல கூடாது எனவும், இரவு நேரங்களில் வனவிலங்குகளை விரட்ட தீ பந்தம் போன்றவை பாதுகாப்பான முறையில் தயார் செய்யப்பட்டு வனவிலங்குகளை விரட்ட வேண்டும் எனவும் மலைவாழ் மக்களுக்கு உடுமலை தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறை சார்பில் அறிவுரை வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் ஐந்து கிராம மலைவாழ் மக்கள் மற்றும் வனத்துறையினர்

கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...