தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்காநல்லூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ESI மருத்துவமனை இணைந்து நடத்திய இம்முகாமில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் உட்பட 192 பேர் இரத்த தானம் செய்தனர்.


Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்றது. சிங்காநல்லூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ESI மருத்துவமனை ஆகியவற்றுடன் இணைந்து ஜூன் 22, 2026 அன்று இந்த முகாம் நடத்தப்பட்டது.



காலை 9.00 மணிக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக செயல் துணைவேந்தர் Dr. கா. சுப்ரமணியன் இந்த இரத்த தான முகாமை துவக்கி வைத்தார். சிங்காநல்லூர் ESI ரத்த வங்கியின் தலைமை மருத்துவர் Dr. உமாசரோஜினி தனது மருத்துவ குழுவினருடன் இம்முகாமை திறம்பட நடத்தி வந்தார்.



இம்முகாமில் பல்கலைக்கழக மாணவ மாணவியர், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்பட மொத்தம் 192 பேர் தானமாக இரத்த தானம் செய்தனர். உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இம்முகாம் மாணவர்கள் மற்றும் பணியாளர்களிடையே சமூக பொறுப்புணர்வை ஏற்படுத்தியது.

இரத்த தானம் செய்வது உயிர் காக்கும் பெருமையான செயல் என்பதை வலியுறுத்தி, தொடர்ந்தும் இது போன்ற முகாம்களை ஏற்பாடு செய்வதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. தானம் செய்த அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...