கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அனைத்து பணிகளையும் நேரில் ஆய்வு செய்து தூய்மை பணியாளர்களுக்கு வழிகாட்டினார். தினசரி சுகாதார பராமரிப்பு உறுதி செய்யப்பட்டது.


Coimbatore: சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் சுகாதார மேம்பாடு மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் இன்று மேற்கொள்ளப்பட்டன. வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அனைத்து பணிகளையும் நேரில் சென்று ஆய்வு செய்து வழிகாட்டினார்.



ரங்கம்மாள் கோயில் வீதி பகுதியில் DBC பணியாளர் மற்றும் RR டீம் மூலம் டெங்கு கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் கொசு புழுக்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன. பின்னர் bleaching பவுடர் போடப்பட்டு, தண்ணீர் தொட்டிக்கு abate மருந்து ஊற்றப்பட்டது. வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இந்த பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் வார்டு ஆய்வாளர் பாஸ்கர் உடன் இருந்தார்.



பெருமாள் கோயில் வீதி பகுதியில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி அங்கன்வாடி மையத்தை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார். குழந்தைகள் வருகை பதிவேடு மற்றும் சமையலறை ஆய்வு செய்யப்பட்டன. இதில் அங்கன்வாடி ஊழியர்களும் உடன் இருந்தனர். குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார பராமரிப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டது.



ஆவாரம்பாளையம் பிரதான சாலையில் ஆசை பேக்கரி முதல் மகாலட்சுமி கோயில் வரை சாலையோரத்தில் உள்ள மரக்குப்பைகள் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு, மரக்குப்பைகள் முழுமையாக சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளர்களிடம் வலியுறுத்தினார்.



துரைசாமி நாயுடு லேஅவுட் பகுதியில் சாலையோரத்தில் உள்ள குப்பைகள் மற்றும் சாக்கடை மண்கள் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இதை நேரில் ஆய்வு செய்து, சாலையோரத்தில் உள்ள குப்பைகளை தினசரி சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். குடியிருப்பு பகுதிகளில் தினசரி சுகாதார பராமரிப்பு அவசியம் என்பதை வலியுறுத்தினார்.



பிளாக் மாரியம்மன் கோயில் வீதி பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புதிய மழை நீர் வடிகால் அமைப்பதற்கான ஆய்வு பணி நடைபெற்றது. வார்டு AE குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் 27வது வார்டு மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபால் உடன் இருந்தார். மழைக்கால வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில் இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது.


Newsletter

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...