மழையில் மண் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்த உடுமலை-மூணாறு சாலையை பராமரிக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

பருவமழை தீவிரமடைந்த போது வனப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் உடுமலை-மூணாறு சாலையின் இரண்டு புறமும் மண்அரிப்பு ஏற்பட்டு சேதம் அடைந்து. அதை சீரமைக்க விடுத்த கோரிக்கையும் நிலுவையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து கேரளா மாநிலம் மூணாறுக்கு செல்வதற்காக ஆனைமலை புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதி வழியாக சாலை அமைக்கப்பட்டு உள்ளது. அதன் வழியாக இரு மாநிலங்களுக்கு இடையே பஸ் மற்றும் வாகன போக்குவரத்தும், மலைவாழ் மக்களும் சமவெளி பகுதிக்கு வந்து செல்கின்றனர்.

பருவமழை தீவிரமடைந்த போது வனப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் உடுமலை-மூணாறு சாலையின் இரண்டு புறமும் மண்அரிப்பு ஏற்பட்டு சேதம் அடைந்து. அதை சீரமைக்க விடுத்த கோரிக்கையும் நிலுவையில் உள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், அதிக அளவுடைய போக்குவரத்தைக் கொண்ட உடுமலை-மூணாறு இரண்டு புறத்தையும் மண்ணை கொட்டி சீரமைப்பதற்கு முன்வராதது வேதனை அளிக்கிறது. இதன் காரணமாக வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று விலகிச் செல்ல முடியாத சூழ்நிலை நிலவுகிறது. மேலும் திடீரென வாகனங்களை சாலை விட்டு இறங்கும் போது பழுதடைந்து ஆங்காங்கே நின்று விடுகிறது.

வனவிலங்குகள் நடமாட்டம் உடைய தற்போதைய சூழலில் வாகனங்கள் பழுது அடைந்ததால் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. அத்துடன் புங்கன்ஓடை அருகே சாலையின் இரண்டு புறங்களிலும் புதர் முளைத்து போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தி வருகிறது.

எனவே உடுமலை-மூணாறு சாலையில் இரண்டு புறங்களிலும் மண்ணை கொட்டி சீரமைப்பதுடன் புங்கள் ஓடை பகுதியில் உள்ள புதர்களை அகற்றி சீரான போக்குவரத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...