உடுமலை அருகே குரல்குட்டை ஊராட்சியில் கிணற்றில் தவறி விழுந்த பெண் பத்திரமாக மீட்பு

கிணற்றுக்குள் தவறி விழுந்து மோட்டார் குழாயை பிடித்தவாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெள்ளையம்மாள் என்ற பெண்ணை, தீயணைப்புத்துறையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் குரல்குட்டை ஊராட்சி உள்ளது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள திறந்தவெளி கிணற்றில் இன்று அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளையம்மாள்(35)என்பவர் தவறி விழுந்து விட்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் உடுமலை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நிலைய அலுவலர் ரா.லட்சுமணன் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் குரல்குட்டைக்கு விரைந்தனர்.

பின்னர் கிணற்றுக்குள் இறங்கி மோட்டார் குழாயை பிடித்தவாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெள்ளையம்மாளை கயிறு கட்டி பத்திரமாக மீட்டு உறவினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் குரல் குட்டை பகுதியில் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...