கோவை TNAU-வில் நறுமணப் பொருள்கள் விற்போர் – வாங்குவோர் சந்திப்பு

தென்னை விவசாயிகளுக்கு அதிக வருவாய் கொடுக்கும் ஜாதிக்காயை தங்களது வயல்களில் ஊடுபயிராகப் பயிரிடுவதை ஊக்குவித்து வருகிறோம் என்று வேளாண் பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.


கோவை: கொச்சி நறுமணப் பயிர்கள் வாரியமும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வணிக மேம்பாட்டு இயக்ககமும் இணைந்து நறுமணப் பொருள்கள் விற்போர்- வாங்குவோர் சந்திப்பு நிகழ்ச்சி கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நேற்று (பிப்.15) நடைபெற்றது.

நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் நறுமணப் பயிர்கள் வாரியத்தின் செயலா் டி.சத்தியன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி பேசியதாவது, உணவு உற்பத்தியில் நாம் தன்னிறைவு அடைந்துவிட்ட நிலையில், விவசாயிகளை பொருளாதார ரீதியில் மேம்படுத்துவதற்கு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, தென்னை விவசாயிகளுக்கு அதிக வருவாய் கொடுக்கும் ஜாதிக்காயை தங்களது வயல்களில் ஊடுபயிராகப் பயிரிடுவதை ஊக்குவித்து வருகிறோம்.

இதைத் தொடா்ந்து, தமிழகத்தின் மலைப் பகுதிகளில் குங்குமப்பூவை பயிர் செய்வதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக காஷ்மீரில் உள்ள ஷோ் இ காஷ்மீா் வேளாண் அறிவியல், தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டு, அங்கிருந்து விதைக் கிழங்குகளைப் பெற்று வந்து உதகை, கொடைக்கானல், ஏற்காடு, தடியன்குடிசை (வத்தலகுண்டு) மலைப் பகுதிகளில் பயிரிட்டு சோதனை நடத்தி வருகிறோம்.

பசுமைக் குடில்களிலும், குளிரான மலைப் பகுதிகளிலும் நாம் பயிரிட்ட குங்குமப்பூ நன்றாக விளைந்திருக்கிறது. காஷ்மீரில் விளையக் கூடிய குங்குமப்பூவுக்கும் இங்கு விளையக் கூடிய பூவுக்கும் இடையிலான வித்தியாசம் என்ன, சரியான தரத்தில் உள்ளதா என்பது குறித்த ஆய்வுகள் தற்போது நடைபெறுகின்றன.

நல்ல தரமான குங்குமப்பூவாக இருக்கும்பட்சத்தில் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கி பரவலாக பயிரிட ஊக்குவிக்கப்படும். அதேபோல, தாளவாடி பகுதியில் ரோஸ்மேரி உள்ளிட்ட மூலிகை நறுமணப் பொருள்களின் உற்பத்தியை ஊக்குவித்து வருகிறோம். கன்னியாகுமரி கிராம்பு, ஈரோடு மஞ்சள், ஆலப்புழை பச்சை ஏலக்காய், மலபார் மிளகு, ராமநாதபுரம் முண்டு மிளகாய், கொடைக்கானல் மலைப்பூண்டு ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதைத் தொடா்ந்து விருதுநகா் சம்பா மிளகாய், விளாத்திக்குளம் முண்டு மிளகாய் வற்றல், காரமடை செங்காம்பு கறிவேப்பிலை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பித்துள்ளோம் என்றார்.

இந்த நிகழ்வில் நறுமணப் பயிர்கள் வாரியத்தின் இயக்குநா் ஏ.பி.ரேமா ஸ்ரீ, வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குநா் இ.சோமசுந்தரம், நறுமணப் பயிர் விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனா்.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...