கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே கார் கவிழ்ந்து விபத்து

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே உள்ள வளைவில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில் நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய மூன்று விவசாயிகள் விபத்தில் சிக்கி காயமடைந்தனர்.


கோவை: கோவை கருமத்தம்பட்டியை சேர்ந்த விவசாயிகள் மூன்று பேர் தங்களது காரில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு இன்று (பிப்.19) வந்தனர். பின்னர் பணி முடிந்து மூன்று பேரும் கருமத்தம்பட்டி செல்வதற்காக காரில் சென்றனர். அப்போது கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே உள்ள வளைவில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக காரின் உள்ளே சிக்கிய மூவரையும் பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் மூவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர். தொடர்ந்து பொதுமக்கள், போலீசார் உதவியுடன் காரை சாலை ஓரத்தில் தள்ளி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து குற்றப்புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...