ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியும் ஸ்ரீ ராம்ஸ் வாலிபால் அகாடமியும் இணைந்து வாலிபால் வீரர்கள் தேர்வு வரும் ஏப்ரல் 5, 6ம் தேதிகளில் நடைபெறவுள்ளது

கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியும் ஸ்ரீ ராம்ஸ் வாலிபால் அகாடமியும் இணைந்து நடத்தும் வாலிபால் வீரர்கள் தேர்வு வரும் ஏப்ரல் 5 மற்றும் ஏப்ரல் 6 ஆகிய தேதிகளில் காலை 7.30 மணி அளவில் ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லாரியில் உள்ள வாலிபால் மைதானத்தில் அர்ஜுனா மற்றும்  துரோணச்சார்யா விருது பெற்ற இந்திய சீனியர் வாலிபால் அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளர் ஜி.இ.ஸ்ரீதரன் மற்றும் முன்னாள் சர்வதேச வாலிபால் வீரர் வி.சி.ராமலிங்கம் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற உள்ளது.

வாலிபால் தேர்வுக்கு வரும் வீரர்கள் பிளஸ்-2 தேர்ச்சியடைந்த அல்லது கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படித்த அல்லது இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்ற மாணவர்ககளாக இருத்தல் வேண்டும். மேலும் விளையாட்டு வீரர்களின் குறைந்தபட்ச உயரம்190 செ.மீ. ஆகும்.

வாலிபால் அகாடமியில் தேர்வு பெறும் வீரர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணா காலைக் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு, வாலிபால் விளையாட்டுக்குரிய அனைத்துவகை சீருடை, உணவு, இருப்பிடம் ஆகியன இலவசமாக வழங்கப்பட்டு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.

வாலிபால் தேர்வுக்கு வரும் வீரர்களுக்கு ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 6 வரை உணவு மற்றும் தங்கும் வசதி இலவசமாக கல்லூரி விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

வாலிபால் விளையாட்டில் ஆர்வமும், திறமையும் உள்ள இளம் வீரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கல்லூரியின் முதல்வர் பெ. பாபா ஞானக்குமார் மற்றும் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் ஆர்.சரவணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

மேலும் தகவலுக்கு தொடர்புக்கு் 09894170112  அல்லது 09894648915 என்ற தொலைபேசி எண்ணிற்கோ அல்லது [email protected][email protected] என்னும் இணையதள முகவரிக்கோ தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...