நெடுஞ்சாலை பராமரிப்பு பணியை தனியாருக்கு வழங்கிய தமிழக அரசைக் கண்டித்து சங்கு ஊதி போராட்டம் நடத்த சாலை பணியாளர் முடிவு


தமிழகத்தில் நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் பணியை தமிழக அரசு தனியாருக்கு வழங்கி இருப்பதைக் கண்டித்து நெடுஞ்சாலை அலுவலகங்கள் முன்பாக சங்கு ஊதி போராட்டம் நடத்துவது என கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு நெடுஞ்சாலை பணியாளர் சங்க மாநிலக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.



கோவையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்க மாநில செயற்குழுக் கூட்டம் தாமஸ் கிளப் அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் அம்சராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு பின்னர் மாநில தலைவர் அம்சராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தமிழக நெடுஞ்சாலையை பராமரிக்கும் பணியை மாவட்டம் தோறும் தமிழக அரசு தனியாருக்கு வழங்கி வருவதாகவும் பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், இராமநாதபுரம் ஆகிய பகுதிகளுக்கு சாலையை பராமரிக்க 1300 கோடி ரூபாயினை எஸ்.பி.கே என்ற தனியார் நிறுவனத்திற்கு அரசாங்கம் ஒதுக்கி உள்ளது என தெரிவித்தார்.

மேலும், அரசே இந்த பணிய நடத்தினால் 300 கோடி மட்டுமே செலவாகும் எனவும், தனியார் நிறுவனம் 1000 கோடி ரூபாய் லாபம் பார்க்கும் வகையில் அளிக்கப்பட்டு இருக்கும் அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என அம்சராஜ் தெரிவித்தார்.

மேலும் 2002-ம் ஆண்டு 10000 சாலை பணியாளர் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக கருதி ஊதியம் வழங்கிட வேண்டும். சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஏப்ரல் 6-ம் தேதி அனைத்து நெடுஞ்சாலை கோட்ட அலுவலகம் முன்பாக சங்கு ஊதி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என அம்சராஜ் தெரிவித்தார்.

ஏப்ரல் 22-ம் தேதி சாலை பணியாளர் சங்க மாநில பிரதிநிதித்துவ கூட்டத்தினை கோவையில் நடத்துவது எனவும். ஏப்ரல் 25-ம் தேதி அரசு ஊழியர்கள் நடத்தும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் மாநிலம் முழுவதும் சாலை பணியாளர்களும் கலந்து கொள்வது எனவும் இன்று நடந்த மாநில செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அம்சராஜ் தெரிவித்தார்

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...