பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை தடுக்க நீதிமன்றத்தில் தடையாணை பெற தவறிய தமிழக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்


கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதை தடுக்க உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெறத் தவறிய தமிழக அரசைக் கண்டித்து கோவையில் பவானி தடுப்பணை தடுப்பு குழுவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சக்கண்டி உள்ளிட்ட 6 இடங்களில் தடுப்பணை கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையிலும், கேரள அரசு கட்டுமான பணிகளை நடத்தி வருகிறது.

இதனிடையே தேக்குவட்டை பகுதியில் தடுப்பணை கட்டுமான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மஞ்சக்கண்டியிலும் தடுப்பணை கட்டும் பணிகளை கேரள அரசு துரிதப்படுத்தியுள்ளது.

கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் பணிகளை மேற்கொள்வதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதை தடுக்க உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெறத் தவறிய தமிழக அரசை கண்டித்து, கோவை சிவானந்தா காலணி பகுதியில் பவானி தடுப்பணை தடுப்பு குழுவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் கலந்து கொண்டன. இப்போராட்டத்தில், கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையாக வழக்கு நடத்தி தடையாணை பெற தவறி விட்டதாகவும், கேரள அரசிற்கு சாதகமாக தமிழக அரசு நடந்து கொண்டதால் தொடர்ந்து கேரள அரசு தடுப்பணை கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.

பவானி தடுப்பணை விவகாரம் தொடர்பாக ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...