கோவையில் வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

இந்தியாவில் வரும் ஒரு சில வாரங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும், தற்போது, இந்தியாவிலேயே மஹாராஷ்டிராவில் உள்ள அகோலா என்னும் நகரத்திலேயே அதிகப்படியாக 44.1 41 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவி வருவதாகவும் இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது. மேலும் ஒரு சில நாட்களில் 2 முதல் 3 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.


முன்னதாகவே தென்னிந்தியாவில் அதிகப்படியாக கோவையில் கடந்த 10 நாட்களாக  வெப்பம் சுட்டறித்து வருகிறது. கோவையில் வெள்ளூருக்கு இணையாக 37 டிகிரி செல்சியஸ், மதுரை 29 டிகிரி செல்சியஸ், திருநெல்வேலி 24 டிகிரி செல்சியஸ், தூத்துக்குடி 33 டிகிரி செல்சியஸ் என வெப்பம் நிலவி வருகிறது. ஆனால் தற்போது கோவையில் 38 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து கார்த்திக் என்னும் விற்பனை பிரதிநிதி கூறுகையில், கோவையில் 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவி வருவது அதிர்ச்சியளிக்கிறது. மாலை 5 மணியளவில் கூட வெயில் சுட்டறிகிறது. இவ்வருடம் கோவையில் நிலவி வரும் வெயில் அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் உள்ளது' என்றார்.

இதுகுறித்து, தனியார் நிறுவன ஊழியர் ராம் பிரசாத் கூறுகையில், கோவையில் தற்போது நிலவி வரும் வெப்பம் சென்னையை நினைவுபடுத்துகிறது. கடந்த சில வருடங்களாகவே கோவையில் இவ்வாறு தட்ப வெப்ப நிலை மாற்றம் அடைந்துள்ளது. சாலை போக்குவரத்தின்போது சிகனல்களில் நிறுத்தத்திற்கான நேரத்தினை குறைத்தால் மக்கள் வெயிலில் இருந்து பாதுகாப்பாக இருப்பார்கள்' என தெரிவித்தார்.

சண்முகசுந்திரம் என்னும் முதியவர் கூறுகையில், இதுபோன்ற வெயில் சுட்டறிகும் காலங்களில் பள்ளிகளில் குழந்தைகளை அழைத்துவர செல்லும்  பெற்றோர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். கோவையில் தொடர்ந்து வெயில் அதிகரிக்கிறது, மழை பொய்த்து போகிறது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...