டீசல், பெட்ரோல் மீதான வாட்வரி குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்


காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் லாரி உரிமையாளர்கள் டீசல், பெட்ரோல் மீதான வாட் வரியினை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



டீசல், பெட்ரோல் மீதான வாட் வரி அதிகரிப்பு, வாகன இன்சூரன்ஸ் கட்டண உயர்வு, 15 வருட பழைய வாகன இயக்கத்தடை, காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே தமிழக போக்குவரத்து துறை அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, லாரி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாக இன்று வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் சுமார் 4 ஆயிரத்து 500 லாரிகள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.

இப்போராட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். லாரி உரிமையாளர்கள் முன்வைத்துள்ள 6 கோரிக்கைகளில் 2 கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு முன்வந்திருந்தாலும், தமிழக அரசு லாரி உரிமையாளர்களின் பிரச்சனைகளை அலட்சியப்படுத்துவதாக குற்றம்சாட்டிய லாரி உரிமையாளர்கள், கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை வேலை நிறுத்தம் தொடருமென தெரிவித்தனர்.

இந்த வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவை தேக்கமடைந்து இருப்பதாகவும், கோவை மாவட்டத்தில் லாரிகள் வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக நாள் ஒன்றுக்கு 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...