காரமடையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் சங்கத்திற்கு திமுக துணை பொதுசெயலாளர் சுப்புலட்சுமி ஜகதீசன் ஆதரவு


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையைம் அருகே காரமடையில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தில்லியில் நடைபெறும் விவசாயிகள் ஆர்பாட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், பவானியின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை தமிழக அரசு தடுக்கக்கோரியும், வன விலங்கு தொல்லையால் விவசாயம் பாதிக்கப்படுவதால் விவசாயிகளே வன விலங்குகளை துப்பாக்கியில் சுட்டு விரட்டவும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காரமடை கார் ஸ்டாண்டு அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனிடையே, காரமடையில் திமுக-வின் செயல் தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்ட நிழச்சியில் பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாமை திறந்து வைக்க வந்த திமுக துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜகதீசன், விவசாய போராட்டத்திற்கு ஆதரவு தந்து பேசினார்.

அவர் பேசுகையில், இந்த நாட்டின் முதுகெலும்பாக வாழ்பவர்கள் விவசாயிகள். இவர்களை புழு பூச்சிகளாக, கிள்ளு கீரைகளாக இந்த அரசாங்கம் நினைத்துக்கொண்டு இருக்கிறது.

கடந்த 2 ஆண்டுகாலமாக ஏற்பட்ட வறட்சியின் காரணமாக விவசாய குடும்பங்களில் பெரியர்கள் முதல் குழந்தைகள் வரை தற்கொலை செய்துகொண்டது இதுவே முதல் முறையாக உள்ளது.

மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை மதிக்காமல் உள்ளது. மேலும் பிரதமர் மோடி தமிழகம், கோவை வந்து சென்றார். தமிழகம் வந்த பிரதமர் விவசாயிகளின் குறைகளுக்கு செவி மடுக்காமல் சென்றது வேதனையளிக்கிறது என பேசினார். 

முன்னதாக, காரமடையில் நடைபெற்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தலைவர் ரங்கசாமி தலைமை வகித்தார். இதில், பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...