ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் மூலம் 9,54,426 குடும்ப அட்டை தாரர்கள் பயன்பெறுவார்கள் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பிசப் உபகாரம் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் மூலம் மின்னணு குடும்ப அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமை வகித்தார். நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பயனாளிகளுக்கு ஸ்மார்ட் ரேஷன் அட்டை வழங்கி பேசினார்.



அப்போது அவர் பேசுகையில், கோவை மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை செயல்படுத்துவதற்காக, நிதிநிலை அறிக்கையில், 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை மிகவும் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 



தமிழகத்தில் சுமார் 1 கோடியே 89 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. குடும்ப அட்டைதாரர்களுக்கு கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாகவும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக செயல்படும் 34,840 நியாய விலைக் கடைகள் மூலமாகவும், அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய், பருப்பு, பாமாயில் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

கோவை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் 1250 நியாயவிலைக் கடைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நடத்தும் 54 நியாயவிலைக் கடைகள், மகளிர் சுயஉதவிக்குழு நடத்தும் 108 நியாயவிலைக் கடைகள் மூலம் என மொத்தம் 1412 கடைகளில் 9,54,426 குடும்ப அட்டை தாரர்கள் பயன்பெறும் வகையில் மின்னணு குடும்ப அட்டை வழங்கும் பணி துவக்கப்பட்டு மே மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு, செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்பப்படும். தகவல் பெறப்பட்ட பின்னர், ரேசன் கடைகளுக்கு நேரில் சென்று, மின்னணு குடும்ப அட்டைகளை அனைவரும் பெற்றுக் கொள்ளலாம் என எஸ்.பி.வேலுமணி பேசினார்.



இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் பிரபு, மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி,  கோவை கூட்டுறவு விற்பனைச் சங்கத்தலைவர் கருப்பசாமி, அர்ச்சுன கூட்டுறவு சங்கத்தலைவர் டி.எ.பெருமாள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...