வனத்துறையினரின் நீண்டநேர போராட்டத்திற்குப் பின் குட்டையில் தவறிவிழுந்த யானை வனத்திற்குள் சென்றது


கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்திற்கு உட்பட்ட நாயக்கன்பாளையம், குஞ்சூர்பதி வனக்குடியிருப்புக்கு அருகில் அமைந்துள்ள கசிவுநீர்குட்டையில் இன்று அதிகாலை 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று கால் வழுக்கி விழுந்ததில் எழ முடியாமல் இருந்தது.



இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரி பழனி ராஜன் தலைமையிலான வனத்துறையினரும், கால்நடை மருத்துவர் மனோகரனும் இணைந்து யானையை நிற்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.



இதனிடையே, அந்த பெண் யானையின் அருகில் ஒரு குட்டி யானையும், பெரிய யானை ஒன்றும் இருந்ததாலும், குட்டி யானை தொடர்ந்து கீழே விழுந்த யானையிடம் பால் குடிக்க வந்ததாலும் வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவரால் அடிப்பட்ட யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டது.



இருப்பினும், நீண்ட நேர போராட்டத்திற்குப் பின் அந்த யானைக்கு ஊட்டச்சத்து மருந்துகள் மற்றும் கிருமிநாசினி மருந்துகள் கொடுக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தனர்.



இதைத்தொடர்ந்து, ஜேசிபி இயந்திரத்தின் உதவியின் மூலம் அந்த யானை எழுந்து நிற்கவைக்கப்பட்டு வனப்பகுதிக்குள் அனுப்பிவைக்கப்பட்டது. 

ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் காயங்களால் உயிரிழக்கும் தருவாயில் இருந்த பெண் யானை மீட்கப்பட்டு ஆரோக்கியமான நிலையில் குட்டி யானையுடன் வனத்திற்குள் சென்ற காட்சி வனத்துறையினர் மற்றும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...