வால்பாறையில் மேளதாளங்களுடன் திமுகவினரின் இறுதி கட்ட பிரச்சாரம் நிறைவு

திமுக கட்சியினர் காந்தி சிலை வளாகத்தில் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதேபோல் அதிமுகவினர் புதிய பேருந்து நிலையம் பகுதியிலும், பாரதிய ஜனதா கட்சியினர் அண்ணா திடல் பகுதியிலும் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


கோவை: நாடாளுமன்றத் தேர்தல் வருகிற 19-ம் தேதி நடக்க இருக்கும் நிலையில் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி நேற்று மாலை 6 மணி அளவில் கட்சியினர் வாக்கு சேகரிக்கும் பிரச்சாரம் முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் திமுக, அதிமுக, பிஜேபி போன்ற கட்சிகள் வால்பாறையில் திமுக கட்சியினர் சுமார் 300 க்கும் மேற்பட்டவர்கள் காந்தி சிலை வளாகத்திலும், இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதேபோல் அதிமுகவினர் புதிய பேருந்து நிலையம் பகுதியிலும், பாரதிய ஜனதா கட்சியினர் அண்ணா திடல் பகுதியிலும் இறுதி கட்ட தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதில் திமுக நகரச் செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் காந்தி சிலை வளாகத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட திமுக கட்சியினர் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



இதில் முன்னாள் நகர மன்ற தலைவர் கோ.கணேசன், திமுக ஆட்சியின் சாதனைகளைப் பற்றியும் திமுக கட்சியை வால்பாறை மக்களுக்கு செய்த சாதனைகளைப் பற்றியும், மகளிர் பேருந்து இலவச பேருந்து மற்றும் மகளிர் உதவித்தொகை மற்றும் பல்வேறு திட்டங்களை வலியுறுத்தி வாக்கு சேகரித்தனர்.

கட்சியினர் மேள தாளங்கள் தட்டி டான்ஸ் ஆடி இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு நிறைவு செய்தனர். இதில் நாங்க நகராட்சி நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி, துணைத்தலைவர் செந்தில்குமார், திப்பம்பட்டி ஆறுச்சாமி, ஜே.பாஸ்கர், செல்வம், மகுடீஸ்வரன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். இதில் காவல்துறையினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு 6 மணி அளவில் பிரச்சாரம் நிறைவு பெற்றது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...