அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவுரை

போலியோ சொட்டு மருந்து 1581 மையங்களில் 5 வயதிற்குட்பட்ட 3.33 லட்சம் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. ஒரு குழந்தை கூட விடுபடாத அளவிற்கு கண்டிப்பாக சொட்டுமருந்து போட்டுக்கொள்ள வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரின் தெரிவித்துள்ளார்.

கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இன்று பொது சுகாதராம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையுடன் ரோட்டரி கிளப் இணைந்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தீவிர போலியோ சொட்டுமருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்தினை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வழங்கியதுடன் முகாமை துவக்கி வைத்து பேசினார். 

அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் தீவிர போலியோ சொட்டுமருந்து முகாம் 2.04.2017 மற்றும் 30.04.2017 ஆகிய இரண்டு தினங்கள் நடைபெறுகிறது. இந்த முகாமில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கட்டாயம் போலியோ சொட்டுமருந்து போட்டுக்கொள்ள வேண்டும்.



பெற்றோர்களுக்கு ஏதுவாக அரசு தலைமை மருத்துவமனை, தாய் சேய் நல விடுதி, பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம், கோவில்கள், மற்றும் பொதுமக்கள் அதிக கூடும் இடங்கள் என 34 மையங்கள் செயல்படுவதுடன் 20 நடமாடும் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு செயல்படுகின்றன.

அனைத்து முகாம்களிலும் போதிய அளவு போலியோ சொட்டு மருந்து தயார் நிலையில் உள்ளது. மேலும் வெளிமாநிலங்களிலிருந்து பணி நிமிர்த்தமாக இடம்பெயர்ந்து வசிக்கின்ற குடும்பங்களை சேர்ந்த 1357 குழந்தைகளுக்கும் சிறப்பு முகாம் மூலம் போலியோ சொட்டு மருந்து உத்திரவிடப்பட்டுள்ளது.

அரசால் வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து மிகவும் தரமானது, பாதுகாப்பானது, உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றது. போலியோ சொட்டு மருந்து வழங்குவதன் மூலம் குழந்தைகளுக்கு எந்தவிதமான பின்விளைவுகளும் ஏற்படாது.

இது நோய் தாக்குதலிருந்து குழந்தைகளை பாதுகாக்கக் கூடிய முக்கியமான மருந்தாக திகழக்கூடிய ஒன்றாகும். இதற்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொது சுகாதாரத்துறையுடன் அங்கன்வாடி பணியாளர்கள், பிறதுறை பணியாளர்கள் மற்றும் ரோட்டரி இன்டர்நேஷனல் நிறுவனம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என 6324 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

திட்டமிட்டப்படி 3.33 லட்சம் குழந்தைகளுக்கு தீவிர போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ளும் விதமாகவும் ஒரு குழந்தை கூட விடுபடாத அளவிற்கும் மேலும் முன்பு எத்தனை முறை சொட்டு மருந்து குழந்தைகளுக்கு கொடுத்திருந்தாலும் தற்பொழுது நடைபெறுகின்ற இரண்டு முகாம்களிலும் பெற்றோர்கள் சிறப்பு கவனம் எடுத்து 5 வயதிற்குட்பட்ட தங்கள் குழந்தைகளுக்கு கட்டாயம் போலியோ சொட்டுமருந்து போட்டுக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.எட்வின்ஜோ, பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் மரு.பானுமதி, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்கள் மரு.சுகந்தி, மரு.மனோண்மணி, மரு.பூமா, மற்றும் ரோட்டரி கிளப் நிர்வாகிகள், அரசு மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...