மாநில எல்லையில் மட்டும் வாகன சோதனை - தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு விளக்கம்

கடந்த 2019 தேர்தலில் இரவு 7:00 மணிக்கு 69 சதவீத ஓட்டுகள் பதிவானதாவும், நேற்று நடைபெற்ற தேர்தலில் 72.09 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு கூறியதாவது, மாநிலம் முழுதும் இரவு 7:00 வரை 72.09 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன. இதில், தபால் ஓட்டுகள் சேர்க்கப்படவில்லை. ஓட்டுச்சாவடியில் பதிவான 2 ஓட்டுகள் விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 தேர்தலில் இரவு 7:00 மணிக்கு 69 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

நேற்று வெயில் அதிகம் இருந்ததால் மாலை 3:00 மணிக்கு மேல் ஏராள மானோர் ஓட்டளித்தனர். மாலை 6:00 மணிக்கு உள்ளாக ஓட்டளிக்க வந்தவர்களுக்கு, டோக்கன் கொடுத்து ஓட்டு போட அனுமதிக்கப்பட்டனர்.

ஓட்டுப்பதிவு முடிந்து விட்டதால், பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு நிறைய இடத்தில் மாற்றப்படும். தேர்தல் கமிஷன் அறிவுரையின்படி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் தேர்தல் நடக்கும் வரை, எல்லை பகுதியில் தேவைக்கேற்ப பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு செயல்படும், மற்ற பகுதிகளில் செயல்படாது.

எல்லை பகுதியில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்து சென்றால் பறிமுதல் செய்யப்படும். ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர்கள், கட்சியினர் அறிக்கை அடிப்படையில், மறுஓட்டுப்பதிவு தேவையென்றால் நடத்தப்படும். தேர்தல் மிகவும் சுமுகமாக, சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லாமல் நடந்து முடிந்துள்ளது. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சிறப்பாக செயல்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...