தாராபுரத்தில் உள்ள கோழிப்பண்ணைகளை ஆய்வு செய்ய கோரி கோட்டாட்சியரிடம் தமிழ் புலிகள் கட்சியினர் மனு

தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கின்ற கோழிப் பண்ணைகளை ஆய்வு செய்து நோய் தொற்று இருக்கும் கோழிப்பண்ணைகளில் உள்ள கோழிகளை உடனடியாக அப்புறப்படுத்தி நோய் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டுமென கோட்டாட்சியரிடம் தமிழ் புலிகள் கட்சியினர் மனு அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளில் இருந்து பரவி வரும் பறவை காய்ச்சலை தடுக்கவும், கோழிப்பண்ணைகளை ஆய்வு செய்ய வலியுறுத்தியும் தமிழ் புலிகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் குண்டடம் காளிமுத்து தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் செந்தில் அரசனிடம் மனு அளித்தனர்.



அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் ஆங்காங்கே தொடர்ச்சியாக கோழிகளிலிருந்து பரவக்கூடிய பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் அதிக அளவு வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கோழி இறைச்சிகளை சாப்பிடுவதால் உடலில் அதிக உஷ்ணத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. இந்நிலையில் தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குண்டடம், மூலனூர், அலங்கியம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட கோழி பண்ணைகளில் இருந்து அதிக அளவில் பறவை காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதாகவும், கோழி இறைச்சிகளை மக்கள் சாப்பிடும் போது பொதுமக்களுக்கு அதிக அளவு பறவை காய்ச்சல் பரவ வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே உடனடியாக தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கின்ற கோழிப் பண்ணைகளை ஆய்வு செய்து நோய் தொற்று இருக்கும் கோழிப்பண்ணைகளில் கோழிகளை உடனடியாக அப்புறப்படுத்தி நோய் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டுமென கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசன் இந்த மனு மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதில் மேலும் மாநில அமைப்பு செயலாளர் முகிலரசன், மேற்கு மண்டல துணை செயலாளர் ஒண்டிவீரன், தாராபுரம் நகர செயலாளர் தொண்டபாணி, தன்ராஜ், பகவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...