காங்கேயம் அருகே மாடு திருடனை சிசிடிவி வீடியோவை வைத்து பிடித்து சிறையில் அடைத்த காவல்துறையினர்

கல்லாங்காடு பகுதியில் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் மதிப்புள்ள ஒரு சிந்து மாடு மற்றும் ஒரு கன்றுக்குட்டியை திருடிச்சென்ற கரூர் மாவட்டம் வைகை நல்லூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே வீரணம்பாளையம் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள கல்லாங்காடு பகுதியில் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்ட சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள ஒரு சிந்து மாடு மற்றும் ஒரு கன்றுக்குட்டி ஆகியவற்றை கடந்த மாதம் ஏப்ரல் 26ஆம் தேதி காணவில்லை என மாட்டின் உரிமையாளர் அருண் பிரசாத் (27) காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

புகாரை தொடர்ந்து போலிசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாடுகளை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் தொடர்ச்சியாக மாடு கட்டிவைக்கப்பட்டிருந்த பகுதிகளிலும் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த காவல்துறையினர், அதில் பதிவான வாகனம் குறித்தும் விசாரணை செய்தனர்.



இந்நிலையில் இரண்டு மாடுகளையும் திருடி சென்ற திருடனை காங்கேயம் போலிசார் தேடி பிடித்துள்ளனர். இதனை அடுத்து போலிசார் மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்ட திருடன் பெயர் சந்தோஷ்குமார் வயது 32 என்பதும், கரூர் மாவட்டம் வைகை நல்லூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது‌. இதனை அடுத்து காங்கேயம் போலிசார் சந்தோஷ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...