மக்கள் விரோதபோக்கில் செயல்படும் மத்திய அரசைக் கண்டித்து கோவை அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தமிழர் நலனில் அக்கறை செலுத்தாமலும், தொடர்ந்து தமிழகம் மற்றும் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலை கடைபிடித்து வரும் மத்திய அரசைக் கண்டித்து தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் கோவை மாவட்ட கமிட்டியின் சார்பில் அக்கட்சியினர் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கோவை மாநகர காங்கிரஸ் துணை பொதுச் செயலாளர் மயூரா ஜெயக்குமார் தலைமை வகித்தார். இதில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

சாய்பாபா காலனி பகுதியில் மாவட்டத் தலைவர் பி.எம்.ஜி.மனோகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதே போன்று சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பொதுச் செயலாளர் இ.ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

கோவை மாநகர அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாய உழவுக்கு தேவையான கலப்பை, நெல் உள்ளிட்டவற்றை கையில் வைத்துக் கொண்டு, மத்திய அரசு வர்தா புயல் நிவாரணத் தொகையை குறைத்து வழங்குவது, தில்லியில் கடந்த 24 நாட்களாக போராடி வரும் தமிழக விவசாயிகளை அழைத்து பேசாமல் இருப்பது, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்டு தமிழர்களை வஞ்சிக்கும் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறது என கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...