இணைய சேவை குறைபாட்டால் தாராபுரம் தலைமை தபால் நிலைய சேவை பாதிப்பு

இணைய சேவை குறைபாடு காரணமாக நேற்றிலிருந்து தலைமை தபால் நிலையத்திலிருந்து எந்த ஒரு பதிவு தபால்களும், இதர சேவைகளும் நடைபெறாமல் உள்ளது. இணைய சேவையில் குறைபாடு உள்ளதாக தலைமை தபால் நிலையத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: தாராபுரம் தலைமை தபால் நிலையத்திலிருந்து தினசரி ஏராளமான பதிவு தபால்கள் வெளியூர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இணைய சேவை குறைபாடு காரணமாக நேற்றிலிருந்து தலைமை தபால் நிலையத்திலிருந்து எந்த ஒரு பதிவு தபால்களும், இதர சேவைகளும் நடைபெறாமல் உள்ளது.

இதற்கு இணைய சேவையில் குறைபாடு உள்ளதாக தலைமை தபால் நிலையத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி இணைய சேவை குறைபாடுகள் ஏற்பட்டு வருகிறது. பெரும்பாலும் அரசு நிறுவனங்களில் உயிரோடு பாரத் சென்சார் நிகாம் லிமிடெட் கட்டுப்பாட்டில் இணைய சேவைகள் தாராபுரம் பிஎஸ்என்எல் அலுவலகம் மூலமாக வழங்கப்பட்டுள்ளது.

இணையத்தில் அடிக்கடி குறைபாடுகள் ஏற்படுவதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி வருகிறார்கள். இதனால் டிஜிட்டல் இந்தியா சேவை முழுமையாக முடங்கி விட்டது. அரசு நிறுவனம் மோசமான இணைய சேவையை சந்திப்பதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். விரைவில் பிஎஸ்என்எல் நிர்வாகம் இணைய சேவையை சீர் செய்யுமா என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...