கோவையில் காவல்துறையினர் ரோந்துபணிக்காக 10 ஆண்டுகளுக்கு பின் குதிரைப் படை துவக்கம்


தமிழக காவல்துறை வரலாற்றில் குதிரைப்படையின் சகாப்தம் கி.பி.1670 முதலே துவங்கிவிட்டது. அப்போது, தமிழக காவல்துறையின் தலைமைப் பொறுப்பில் இருந்தவரை தனது பயணத்திற்காக அலங்கார மெய்க்காவலர்களை நியமிக்குமாறு அப்போதைய சென்னை மாநகர ஆளுநர் சர்.வில்லையம் லங்ஹோர்ன் உத்தரவிட்ட போதே தமிழக காவல்துறை வரலாற்றில் குதிரைகளின் பயன்பாடு துவங்கிவிட்டது.

மேலும், கி.பி.1800 முதல் காவல் பணிகளுக்காகவும், தமிழக காவல்துறையில் குதிரைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 1926ம் ஆண்டில் வால்டர் கிராண்ட் என்பவர் சென்னை மாநகர காவல் கண்காணிப்பாளராக இருந்த போது 15 குதிரைகளைக் கொண்ட குதிரைப்படைப் பிரிவு துவங்கப்பட்டது.

பின்னாட்களில் அக்குதிரைப்படைப் பிரிவு 56 குதிரைகளுடன் விரிவுபடுத்தப்பட்டது. சென்னை மாநகர காவலில் மோட்டார் வாகனங்களுடன் மோட்டார் வாகனப்பிரிவு துவங்கப்பட்ட போது குதிரைகளின் எண்ணிக்கை 34 ஆக குறைக்கப்பட்டது.

கோவை காவல்துறைக்கென தனியே ஒரு குதிரைப்படைப்பிரிவு அமைக்க 1982 ஆம் ஆண்டிலேயே அனுமதி அளிக்கப்பட்டபோதும் கோவை மாநகர காவல்துறை ஆணையரகம் அமைக்கப்படும் வரை குதிரைப்படை பிரிவு அமைப்பது தாமதமாகி வந்தது. 

பின்னர், 29.03.1991 அன்று 10 குதிரைகளைக் கொண்ட கோவை மாநகர குதிரைப் படைப்பிரிவு அப்போதைய காவல்துறைத் தலைவர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) வால்டர் தேவாரத்தால் துவங்கிவைக்கப்பட்டது. 

இந்நிலையில், குதிரைகள் இல்லாத காரணத்தினால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் இருந்த கோவை மாநகர குதிரைப் படைப்பிரிவு இன்று மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.



இதுகுறித்து, கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் கூறுகையில், 1670 ஆம் ஆண்டில் மவுண்டன் கிளை துவங்கப்பட்டது. அன்றிலிருந்து கோவை, மதுரை, சென்னை ஆகிய மூன்று நகரங்களில் இது செயல்பட்டு வந்தது. கோவையில் 1901-யில் குதிரைப் படை செயல்பட்டு வந்தது. இதனிடையே, கடந்த 10 ஆண்டுகளாக குதிரை தட்டுப்பாட்டின் காரணமாக கோவை மாநகரத்தில் குதிரைப் படைப் பிரிவு நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.



இக்குதிரைகளுக்கு சென்னை குதிரைப் படைப்பிரிவு மூலம் ஒரு மாத காலம் பயிற்சிகள் வழங்கப்பட்டு தற்போது 5 குதிரைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும், 5 குதிரைகள் வரவுள்ளது. இவற்றை பயன்படுத்த காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. இக்குதிரைகள் மக்கள் நடமாட்டம் உள்ள இடங்கள், ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் பயன்படுத்தப்படும்" என்றார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...