கோவையில் EHS நடைமுறைகளில் முன்னணி வகிக்கும் கோயம்புத்தூர்

கோவையில் EHS நடைமுறைகளில் சிறப்புடன் முன்னணி வகிக்கும் கோவை, சுகாதாரம், பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் தொழில்நுட்ப முன்னேற்றம் அடைந்துள்ளது.


Coimbatore: கோயம்புத்தூரில் சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு (EHS) நடைமுறைகளில் முன்னணியாக உள்ளதாக, இந்திய தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் தகவல் கூறப்பட்டது. கோவையின் தொழில்நுட்ப முன்னேற்றம், நடைமுறைப்படுத்தல் மற்றும் சமூக எதிர்பார்ப்புகளை மேம்படுத்துவதில் EHS முக்கிய பங்கு வகிக்கிறது. ஜி சௌந்தரராஜன், CII பம்ப்ஸ் துணைத் தலைவர், "எம்பவர், எம்ப்ரேஸ், இவால்வ்: EHS-ன் சிறப்பு உயர்த்துதல்” மாநாட்டு கூட்டத்தில் பேசினார்.

கோயம்புத்தூர் ஜவுளி உற்பத்திக்கு மட்டுமல்ல, பொறியியல், தொழில்துறை மற்றும் கல்விக்கும் பெயர் பெற்றது. ஜவுளி ஆலைகள் மற்றும் உற்பத்தி ஆலைகளில் சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு (EHS) நடைமுறைகளை மேம்படுத்துவதில் கோவை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த முயற்சிகளில் மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அடிப்படையிலான நீர் சுத்திகரிப்பு முறைகள், தொழில்சார் சுகாதாரம் மற்றும் அவர்களின் தொழிலாளர்களின் பாதுகாப்புத் திட்டங்கள் ஆகியவை அடங்கும்,” என்று தனது சிறப்புரையின் போது CII தெற்கு மண்டலத்தின் தலைவர் மற்றும் சந்திரா டெக்ஸ்டைல் பிரைவேட் லிமிடெடின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஆர் நந்தினி, கூறினார்.

“கோயம்புத்தூரில் உள்ள கல்வி நிறுவனங்கள் எதிர்கால வல்லுநர்களுக்கு கல்வி அளிப்பதில், EHS விழிப்புணர்வு மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன,” என்று அவர் மேலும் கூறினார்.

CII-SR EHS Excellence Awards 2023 இன் தலைவர் மற்றும் டான்ஃபோஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் P ரவிச்சந்திரன் தனது வரவேற்பு உரையில், "கோவை நிறுவனங்களில் பல தலைமுறை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இது இந்த நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சவாலாகவும் மிகப்பெரிய வாய்ப்பாகவும் உள்ள நிலையில் இவர்களை பணிச்சூழலில் ஒருங்கிணைப்பதில் EHS முக்கிய பங்கு வகிக்கிறது.

"EHS இப்போது வணிகத்தின் மிக முக்கியமான அங்கமாகும். EHS இன் கண்ணுக்கு தெரியாத முக்கிய செயல்திறன் சுட்டிகாட்டிகள்(KPI) நிறுவனங்கள் கருத்தில் கொள்ள வேண்டும், ஏனெனில் இந்த KPIகள் நிறுவனத்தின் கலாச்சாரத்தை வரையறுக்கின்றன.” என்று CII-SR EHS Excellence Awards 2023 இன் இணைத் தலைவர், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் சின், மூத்த துணைத் தலைவர் மற்றும் இயக்குனர் - தொழில்நுட்பம் மற்றும் கொள்முதல், தலைமை தொடர்பு அதிகாரி திரு சுதீப் டால்வி கூறினார்.

இம்மாநாட்டில் EHS-ன் சிறப்பை மேம்படுத்துதல், EHS சிறப்பை நிறுவுதல், EHS சிறப்பை உயர்த்துதல் மற்றும் EHS சிறப்பு விருது விநியோகம் பற்றிய குழு விவாதம் பற்றிய அமர்வுகள் நடைபெற்றன.

சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு, ஆற்றல் / கார்பன் தடம், நீர் மேலாண்மை, பணியிட சுகாதாரம், சாலைப் பாதுகாப்பு, EHS கண்டுபிடிப்பு, பணியிடத்தில் EHS பணியாளர் ஈடுபாடு, இதர சிறந்த நடைமுறைகள், EHS இல் பெண்கள், EHS தலைமைத்துவம் ஆகியவற்றில் 208 விருதுகள் அறிவிக்கப்பட்டன.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...