ஆர்.கே. நகரில் திமுக வெற்றி பெறக்கூடாது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கோவையில் பேட்டி


திமுக காங்கிரஸோடு இணைந்து பெரிய அளவுக்கு தேசிய அளவில் ஊழல் செய்திருப்பதால் மக்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப்போடுங்கள், திமுக-வுக்கு மட்டும் ஓட்டுப்போடாதீர்கள் என்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி பேட்டியளித்தார்.

மேலும் அவர் கூறுகையில், தருண் விஜய் தென்னியந்தியர்களைப் பற்றி பேசியது வெள்ளைக்காரன் எழுதி வைத்த புத்தகத்தை படித்து பேசியது ஆகும், நிறத்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. ஜீன் அளவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை அனைவருக்கும் ஒரே ஜீன் தான். மேலும், தருண் விஜய் அந்த புத்தகத்தை தெளிவாக படிக்க வேண்டும்.

டெல்லியில் போராடும் விவசாயிகள் தன்னிடம் குறை ஒன்றையும் சொல்லவில்லை. அவர்களின் போராட்டம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது. முல்லைபெரியாறு விவசாயிகள் வேண்டுகோள் கொடுத்ததின் பேரில் உச்சநீதிமன்றத்தில் அந்த வழக்கில் வெற்றி பெற்றுக்கொடுத்தேன். பாராளுமன்றத்தில் நாற்பது எம்பி-க்கள் விவசாய அமைச்சரையும், பிரதம மந்திரியையும் சந்திக்க வேண்டும்.

சசிகலாவை அடுத்து யார் ஜெயிலுக்குப் போவார்கள் என்ற பத்திரிகையாளரின் கேள்விக்கு, சோனியா காந்தி, பா.சிதம்பரம், அவரது மனைவி, கார்த்தி மற்றும் கனிமொழி, ராஜா ஆகியோர் ஜெயிலுக்கு போவதற்கு தயாராக இருப்பதாக கூறினார்.

பத்திரிகையாளர்கள் தேசத்துரோகிகள் என ஹெச்.ராஜா பேசவில்லை என்பதை தன்னிடம் கூறினார். நான் பொருக்கி என்று சொல்லாததை சொன்னதாக கூறியவர்கள் நிருபிக்க வேண்டும் என சாவல்விட்டும் யாரும் நிரூபிக்கவில்லை. 

வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினால் தேர்தல் நிறுத்தப்படும் என்று எந்த சட்டத்திலும் சொல்லப்படவில்லை. மேலும் வருமான வருத்துறை சோதனைக்கும், மத்திய அரசுக்கும் தொடர்பில்லை. இது அதிகாரிகளின் நடவடிக்கை.

ஜம்மூ காஸ்மீரில் மட்டுமில்லாமல் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புகள் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் பகுதியிலும், கேரளாவிலும் உள்ளனர். இதை ஒடுக்க இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா ஒரு கூட்டுப்படையை உருவாக்கினால் மட்டுமே இந்த அமைப்பை அழிக்க முடியும் என்றார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...