உறுதி அளிக்கபட்ட வாக்குறுதிகளை உடனே நிறைவேற்றக் கோரி மண்பாண்ட தொழிலாலர் நல சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

அரசு நிலங்களில் தேவையான களிமண் எடுத்து கொள்ள சிறப்பு சலுகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல நிறைவேற்றுவதாக அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மண்பாண்ட தொழிலாளர்கள் மனு அளித்தனர்.



இதுகுறித்து மனு அளிக்கவந்த மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், மண்பாண்ட தொழிலில் சுமார் 40 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். இதில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2016 பிப்ரவரி 14ம் தேதியன்று சென்னை வண்டலூரில் அகில உலக மண்பாண்ட தொழிலாளர்கள் மாநாட்டு நடைபெற்றது.

இதில், மழைக் கால பராமரிப்பு உதவி தொகை 5 ஆயிரம் வழங்கிட வேண்டும். தொழில் கூடங்கள் அமைக்க மானியம் வழங்க வேண்டும். அரசு நிலங்களில் தேவையான களிமண் எடுத்துக் கொள்ள சிறப்பு சலுகை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த தீர்மானங்கள் தமிழக அமைச்சர்களிடம் அளிக்கபட்டது. இதில் 4 தீர்மானங்களை உடனடியாக நிறைவேற்றித் தருவதாக அமைச்சர்கள் உறுதியளித்தனர். 

அவர்கள் உறுதியளித்து ஒரு ஆண்டு கடந்த நிலையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் கோவை மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள நிலையில் தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும்" இவ்வாறு தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...