கோவை கோட்டைமேடு பகுதியில் திமுகவினர் மட்டன் பிரியாணி வழங்கி கொண்டாட்டம்

திமுக வேட்பாளர் ராஜ்குமார் 28,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருவதால் திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணி, லட்டு வழங்கி அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.


கோவை: நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் 38 தொகுதிகளில் திமுக., முன்னிலை வகித்து வருகிறது. இதனை ஒட்டி தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை, அதிமுக வேட்பாளர் ராமச்சந்திரனை விட திமுக வேட்பாளர் ராஜ்குமார் 28,000 மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

இந்த நிலையில் கோவையில் திமுக மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமையில் இன்று ஜூன்.4 திமுகவினர் காந்திபுரம் பேருந்து நிலையம் பகுதியில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோட்டைமேடு பகுதியில் திமுகவினர் பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணி வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பிரியாணி வழங்கும் போது அருகில் ஆடுகளை நிறுத்தி வைத்திருந்தனர்.

கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்து இன்று ஜூன்.4 கொண்டாடினர். பின்னர் பொதுமக்களுக்கும் பேருந்து நிலையத்தில் பஸ்ஸில் உள்ளவர்களுக்கும் லட்டு கொடுத்தனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...