சூலூர் அருகே குடிநீர் பைப்பை உடைத்த மர்ம நபர்கள் - காவல் நிலையத்தை நள்ளிரவில் முற்றுகையிட்ட பொதுமக்கள்

அய்யம்பாளையம் கிராத்தில் குடிநீர் பைப்பை உடைத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்நிலையத்தை நள்ளிரவில் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் சுல்தான்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதி அய்யம்பாளையம். இந்த கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்களுக்கு ஊராட்சி சார்பில் பொது பயன்பாட்டுக்காக நிலத்தடி நீர் தோண்டப்பட்டு அதன் மூலம் தண்ணீரானது வழங்கப்பட்டு வருகிறது.

அய்யம்பாளையம் பகுதியில் நிலத்தடி நீர் கொண்டு செல்லும் குடிநீர் பைப்பை சில மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இதனை அடுத்து அப்பகுதியில் தண்ணீர் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த ஊர் பொதுமக்கள் பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.



உடனடியாக அந்த மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி திருப்பூர் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து, சம்பவத்தை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கருமத்தம்பட்டி துணைக் கண்காணிப்பாளர் தங்கராமன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பின்னரே போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...