தில்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக பொள்ளாச்சியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் தில்லியில் உள்ள ஜந்தர் மந்தர் என்னும் பகுதியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த நான்கு வாரங்களாக நடைபெற்று வரும் இந்த போராட்டமானது இன்றுடன் 29-வது நாளை எட்டியுள்ளது.



இதனிடையே, நேற்று (ஏப்ரல் 10) திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளில் சிலர் நிர்வாணமாக சாலையில் புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டது தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் அதிர்ப்திக்குள்ளாகினர்.



இதனைத்தொடர்ந்து இன்று கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் மக்கள் ஒன்றிணைந்து தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இப்போராட்டத்தின் போது, அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் முழுமையாக கிடைக்க வேண்டும். திருமூர்த்திமலை அணை தூர்வாரி நீர்கொள்லளவை அதிகரிக்க வேண்டும். பிஏபி கால்வாயை செப்பனிட்டு தண்ணீர் விணாகாமல் கடைமடை வரை தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். ஆனைமலை நல்லாறு திட்டத்தினை நிறைவேற்ற வேண்டும். தில்லியில் போராடும் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும். வறட்சியினால் வங்கியில் வாங்கிய கடனை கட்டமுடியாமல் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை மற்றும் அதிர்ச்சி மரணம் அடைந்துள்ளனர். எனவே, அவர்களது குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...