கோவை வட்டாரத்தில் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம் – மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரம்

ஆனைமலை வட்டாத்தில் உள்ள 19 ஊராட்சிகளில் நர்சரிகளில் 14,720 மரக்கன்றுகளும், அன்னூர் வட்டாரத்தில் உள்ள 21 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 16276 மரக்கன்றுகள் என மொத்தம் 228 ஊராட்சிகளில் உள்ள நர்சரிகளில் 1,64,330 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.


கோவை: கோவை, தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள 10 ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடிதொடங்கி வைக்கும் விதமாக, தென்னமநல்லூர் ஊராட்சி, மீன்தொட்டி பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு அண்மையில் ஜூன்.12 தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வேதா சுமன், தென்னமநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடுதல் பணிக்கு சென்னை, ஊரக வளர்ச்சி இயக்குநர் 1,27,420 குறியீடு நிர்ணயம் செய்து வரப்பெற்றுள்ளது. அதில் 2024-25 ஆம் நிதியாண்டில் இதுவரை 39,477 மரக்கன்றுகள் பொது திறந்தவெளிப்பகுதி, சாலையோரம் மற்றும் ஆற்றங்கரையோரங்களில் நடுதல் பணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது.



அவற்றில் உலக சுற்றுச்சூழல் வாரத்தினை முன்னிட்டு 5382 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 12 வட்டார நர்சரி மற்றும் 12 கூடுதல் நர்சரிகளில் 1,75,560 நாற்றங்கால் உற்பத்தி செய்ய மாவட்ட ஆட்சித்தலைவரால் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கோயம்புத்தூர் மாவட்டத்தில், ஆனைமலை வட்டாத்தில் உள்ள 19 ஊராட்சிகளில் நர்சரிகளில் 14,720 மரக்கன்றுகளும், அன்னூர் வட்டாரத்தில் உள்ள 21 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 16276 மரக்கன்றுகளும், காரமடை வட்டாரத்தில் உள்ள 17 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 13,176 மரக்கன்றுகளும், கிணத்துகடவு வட்டாரத்தில் உள்ள 34 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 22000 மரக்கன்றுகளும், மதுக்கரை வட்டாரத்தில் உள்ள 9 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 6,976 மரக்கன்றுகளும், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள 9 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 6,976 மரக்கன்றுகளும், பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் உள்ள 39 ஊஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 22,204 மரக்கன்றுகளும், பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் உள்ள 26 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 20,150 மரக்கன்றுகளும், சர்க்கார்சாமக்குளம் வட்டாரத்தில் உள்ள 7 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 5426 மரக்கன்றுகளும், சுல்தான்பேட்டை வட்டாரத்தில் உள்ள 20 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 15,500 மரக்கன்றுகளும், சூலூர் வட்டாரத்தில் உள்ள 17 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 13,176 மரக்கன்றுகளும், தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள 10 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 7,750 மரக்கன்றுகளும் என மொத்தம் 228 ஊராட்சிகளில் உள்ள நர்சரிகளில் 1,64,330 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...