கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்தை தாராபுரம் நகராட்சியில் இணைக்க கூடாது என பொதுமக்கள் மனு

தாராபுரம் தாலுகாவில் ஜமாபந்தியில், கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்தை தாராபுரம் நகராட்சியில் இணைக்க வேண்டும் என்ற முடிவுக்கு எதிராக பொதுமக்கள் மனு அளித்தனர். ஆர்.டி.ஒ செந்தில் அரசன் பார்வைக்கு அனுப்பினார்.



திருப்பூர்: தாராபுரம் தாலுகாவில் ஜமாபந்தி ஆர்டிஓ செந்தில் அரசன் தலைமையில் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. தாசில்தார் கோவிந்தசாமி முன்னிலை வகித்தார். தாராபுரம் உள் வட்டத்தை சேர்ந்த 9 வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பட்டாமாறுதல், ஓஏபி உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 220 மனுக்கள் அளிக்கப்பட்டது. மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்.டி.ஒ கூறினார்.



தாராபுரம் கவுண்டச்சி புதூர் பஞ்சாயத்தைசேர்ந்த 9 வார்டுகளிலிருந்து பெண்கள் உள்பட சுமார் 200 பேர் தாராபுரம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.



பின்னர் ஆர்டிஓவிடம் பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டதாவது, கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்தை தாராபுரம் நகராட்சியுடன் இணைப்பத என்ற முடிவு எடுக்க உள்ளதாக அறிந்தோம்.

100 நாள் வேலை திட்டத்தில் தற்போது 2 ஆயிரம் பேர் வேலை செய்து வருகிறோம். நகராட்சியுடன் இணைத்தால் வேலை வாய்ப்பை இழப்பதுடன் வாழ்வாதாரம் பாதிக்கும்.

மேலும வறுமை கோட்டிற்கு கீழ்வாழும் எங்களுக்கு நகராட்சியில் வசூலிக்கப்படும் சொத்துவரி, குடிநீர் கட்டணத்தை செலுத்த இயலாது. எனவே இவ்முடிவை கைவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது மனுவை பெற்றுக்கொண்டார். ஆர்.டி.ஓ செந்தில் அரசன் தமிழக அரசின் பார்வைக்கு அனுப்பி வைப்பதாக கூறினார்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...