தமிழக அரசின் துணையோடு தான் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுகிறது - கோவை ஆட்சியரிடம் தேமுதிக புகார்

அரசின் துணையோடு தான் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. கள்ளச்சாராயம் மரணத்திற்கு திமுக அரசு தான் முற்றிலும் காரணம். கள்ளச்சாராய வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் தேமுதிக சார்பில் கருப்பு சட்டை அணிந்து புகார் மனு அளிக்கப்பட்டது.


கோவை: தமிழக அரசின் துணையோடு தான் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. கள்ளச்சாராயம் மரணத்திற்கு திமுக அரசு தான் முற்றிலும் காரணம். தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடை, கஞ்சா, கள்ளச்சாராய விற்பனையை உடனடியாக தமிழக அரசு தடுக்க வேண்டும்.



கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ (CBI) விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் தேமுதிக சார்பில் கருப்பு சட்டை அணிந்து வந்து புகார் மனு அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிர்வாகி சந்துரு, தமிழகம் முழுவதும் டாஸ்மாக், கஞ்சா, கள்ளச்சாராய விற்பனையை உடனடியாக தமிழக அரசு தடுக்க வேண்டும். தமிழக அரசின் துணையோடு தான் கள்ளச்சாராய விற்பனையும், கஞ்சா விற்பனையும் நடைபெறுகிறது. இதை உடனடியாக மாவட்ட ஆட்சியர் தடுக்க வேண்டும். மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி கள்ளச்சாராயம் குடித்து 63 பொதுமக்கள் மரணத்திற்கு பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும். கள்ளச்சாராய மரணத்திற்கு ஆளுகின்ற திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும். கள்ளச்சாராய வழக்கை சிபிஐ(CBI) விசாரணைக்கு உடனடியாக மாற்ற தாங்கள் பரிந்துரை செய்ய வேண்டும். தமிழகத்தில் நடக்கும் அனைத்து சாராய ஆலைகளும் ஆளும் கட்சியினரால் நடத்தப்படுகிறது. எனவே சாராய ஆலைகளை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...