உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆட்சியர் சூலூர் மக்களின் குறைகளை ஜூலை 18,19-ல் கேட்க உள்ளார்-மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

பொதுமக்கள் தங்கள் கிராமத்தில் சிறப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரியிடமோ, சூலூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் 18- ஆம் தேதி மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலும் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாகவோ மனு அளித்து பயன்பெறலாம்.


Coimbatore: கோவை மாவட்ட நிர்வாகம் அண்மையில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவை மாவட்ட ஆட்சியா்கள், அதிகாரிகள் மாதந்தோறும் மாவட்டத்தின் ஏதேனும் ஒரு வட்டத்துக்கு பொதுமக்களைத் தேடிச்சென்று இரவில் அங்கேயே தங்கியிருந்து அவா்களின் குறைகளைக் கேட்டு, அவற்றுக்கு உடனுக்குடன் தீா்வு காணும் இந்தத் திட்டம், அரசின் அனைத்து நலத் திட்டங்களும் சேவைகளும் தங்குதடையின்றி சென்றடைவதை உறுதி செய்வதற்காக செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி ஜூலை 18- ஆம் தேதி காலை 9 மணி முதல் 19- ஆம் தேதி காலை 9 மணி வரை சூலூா் வட்டத்திலேயே ஆட்சியா் முதல் முக்கிய அதிகாரிகள் அனைவரும் தங்கியிருந்து கள ஆய்வுகளில் ஈடுபடுவதுடன், பொதுமக்களின் குறைகளைக் கேட்க உள்ளனா்.

சூலூா் வட்டத்தில் உள்ள 41 கிராம நிா்வாக அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளா் அலுவலகங்கள், 5 பேரூராட்சி அலுவலகங்கள், கருமத்தம்பட்டி நகராட்சி அலுவலகம், 2 வட்டார வளா்ச்சி அலுவலகங்கள், வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்ட துறை தலைமை அதிகாரிகள் 18- ஆம் தேதி காலை 11 மணி முதல் 12 மணி வரை மனுக்கள் பெறுகின்றனா்.

பொதுமக்கள் தங்கள் கிராமத்தில் சிறப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரியிடமோ, சூலூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் 18- ஆம் தேதி மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலும் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாகவோ மனு அளித்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...