கோவை 'கவுண்டம்பாளையம்' திரைப்படம் வெளியீடு ஒத்திவைப்பு - நடிகர் ரஞ்சித் பேட்டி

கோவையில், 'கவுண்டம்பாளையம்' திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இயக்குனரும் நடிகருமான ரஞ்சித் அறிவித்துள்ளார். படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், முதல்வர் மற்றும் செய்தித்துறை அமைச்சரை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் நாளை வெளியாக இருந்த 'கவுண்டம்பாளையம்' திரைப்படம் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அப்படத்தின் இயக்குனரும் நடிகருமான ரஞ்சித் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வரையும், செய்தித்துறை அமைச்சரையும் சந்தித்து படம் வெளியிட ஆதரவு கேட்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த படத்தை வெளியிட கூடாது என்பதில் பலர் முனைப்போடு இருப்பதாகவும், திரையரங்க உரிமையாளர்கள் சொல்லும் போது வருத்தமாக இருப்பதாகவும் கூறினார்.

"நாடக காதலை பற்றியும், பெற்றோர்களின் வலியையும் படமாக எடுத்துள்ளேன். இதற்கு பல இடங்களிலிருந்து எதிர்ப்பு வருகிறது," என்று ரஞ்சித் விளக்கினார். மேலும், "ஒரு படம் எடுப்பது எவ்வளவு சிரமம் என்று எனக்கு தெரியும். என் வாயில் வந்த கருத்துக்கள் அனைத்தும் உண்மையே. நான் அரசியல்வாதி கிடையாது. இந்த படத்தின் வெற்றிதான் என்னை எதிர்ப்பவர்களுக்கு நான் சொல்லும் பதில்," என்றும் அவர் கூறினார்.

"செண்சார் சான்றிதழ் வாங்கியும் இந்த படத்தை என்னால் வெளியிட முடியவில்லை. ஆனால் யார் எதிர்க்கிறார்கள் என்று நான் சொல்ல விரும்பவில்லை. தமிழக அரசின் அனுமதி பெற்று இந்த படத்தை விரைவில் வெளியிடுவேன்," என்று ரஞ்சித் தெரிவித்தார்.

திரையரங்கில் படத்தை திரையிட்டால் கலாட்டா செய்வோம் என்று பலர் திரையரங்க உரிமையாளர்களை மிரட்டுவதாக ரஞ்சித் குற்றம்சாட்டினார். "திரையரங்கின் பாதுகாப்பு மிக முக்கியம். ஒரு நாடக காதலை பற்றியும், ஒரு நல்ல குடும்ப கதையை நான் எடுத்துள்ளேன். ஆனால் மிரட்டி என்னை போன்ற எளிய கலைஞனை வளர விடாமல் தடுக்கிறார்கள்," என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக, கோவை மாநகர காவல் ஆணையரிடம் படத்தின் எதிர்ப்பு மற்றும் மிரட்டல் தொடர்பாக புகார் மனு அளித்ததாகவும் ரஞ்சித் தெரிவித்தார்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...