கோவை அரசு கலைக் கல்லூரியில் ரூ.33.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கழிப்பறைகள் திறப்பு

கோவை அரசு கலைக் கல்லூரியில் கிரிஷா அறக்கட்டளையின் CSR நிதியுதவியுடன் மாணவிகளுக்காக ரூ.33.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கழிப்பறைகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி திறந்து வைத்தார்.


Coimbatore: கோவை அரசு கலைக் கல்லூரியில் தனியார் நிறுவனமான எமரால்டு ஜுவெல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட்டின் கிரிஷா அறக்கட்டளை சார்பில், சமூக பொறுப்பு நிதி (CSR) மூலம் மாணவிகளுக்காக ரூ.33.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கழிப்பறைகள் ஜூலை 5 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து வைத்தார். அவர் தனது உரையில், மாணவிகளின் நலனுக்காக இத்தகைய உதவிகளை வழங்கும் தனியார் நிறுவனங்களின் முயற்சிகளை பாராட்டினார்.



எமரால்டு ஜுவெல் இண்டஸ்ட்ரி நிறுவனத்தின் தலைவரும், கிரிஷா அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலருமான சீனிவாசன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், அறக்கட்டளை மூலம் மேற்கொள்ளப்படும் சமூக முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். மேலும், மாணவ மாணவியர் கல்வி கற்று எதிர்காலத்தில் சமூக பணியாற்ற முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.



இந்நிகழ்ச்சியில் அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் எழிலி, எமரால்டு நிறுவனத்தின் அலுவலர்கள், கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் பல மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். புதிய கழிப்பறை வசதிகள் மாணவிகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...