உடுமலை அருகே ரூ.15 கோடி நில மோசடி: கணியூர் பதிவுத்துறைக்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

உடுமலை அருகே ரூ.15 கோடி மதிப்புள்ள நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்ததற்கு எதிராக, கணியூர் பதிவுத்துறை அலுவலகத்தை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக்குளம் கணியூரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடாக பத்திரப்பதிவு நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. சார் பதிவாளர் பழனிச்சாமி லஞ்சம் பெற்றுக் கொண்டு ஆளும் கட்சிக்கு சாதகமாக பத்திரப்பதிவு செய்து கொடுப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

துங்காவி கிராமத்தைச் சேர்ந்த நடராஜ் என்பவரின் மனைவி கலைச்செல்வி மற்றும் அவரது மகன் விஜயராஜா ஆகியோரின் ரூ.15 கோடி மதிப்புள்ள சொத்துக்களை, துரைராஜா என்பவரின் மனைவி ராஜாமணி சார்பதிவாளர் அலுவலகத்தில் மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடான பதிவுக்கு சார்பதிவாளரும் உடந்தையாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.



இந்த நிலையில், முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ள ஆவணங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும், அப்பாவி விவசாயிகளை ஏமாற்றி பத்திரப்பதிவு செய்து வரும் கணியூர் சார் பதிவாளரை உடனடியாக பணியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி அகில இந்திய விவசாய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சார் பதிவாளரால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இணைந்து கலந்து கொண்டனர். மேலும் சார் பதிவாளர் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...