கோவையில் 5 நாட்கள் நடைபெறும் அக்ரி இன்டெக்ஸ் வேளாண் கண்காட்சி: 150 கோடி ரூபாய் வருவாய் இலக்கு

கோவை கொடிசியா வளாகத்தில் வரும் 11 முதல் 15 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் அக்ரி இன்டெக்ஸ் 2024 வேளாண் கண்காட்சியில் 498 அரங்குகள் அமைக்கப்படும். சர்வதேச பங்கேற்புடன் 150 கோடி ரூபாய் வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை கொடிசியா தொழிற்கூட கண்காட்சி வளாகத்தில் "அக்ரி இன்டெக்ஸ் 2024" என்ற தலைப்பில் 22-வது ஆண்டு வேளாண் கண்காட்சி சர்வதேச அளவில் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சி வரும் ஜூலை 11 ஆம் தேதி துவங்கி 15 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும்.



இது குறித்து கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதிகாரிகள் கூறியதாவது: "வழக்கமாக நான்கு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி இந்த ஆண்டு ஐந்து நாட்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், நான்கு நாட்கள் போதிய அளவில் இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்ததன் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது."

"இந்த கண்காட்சிக்காக 498 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மலேசியா, சிங்கப்பூர், சீனா, தென்கொரியா உட்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் இந்த கண்காட்சியில் பங்கேற்க உள்ளனர். மேலும், ஜப்பான் நாட்டிலிருந்து சிறப்பு வேளாண் குழுவினரும் கண்காட்சியைப் பார்வையிட்டு, அவர்களுடைய பல்வேறு தொழில்நுட்பங்களை எடுத்துக் கூற உள்ளனர்."

"விவசாயிகள் தங்களுடைய உற்பத்திப் பொருட்களை எவ்வாறு சந்தைப்படுத்தி லாபம் பெற முடியும், அதற்கான வழிமுறைகள், தேவையான ஆலோசனைகள் ஆகியவை வழங்கப்பட உள்ளன. மேலும், கால்நடைகளுக்கு தனியாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. குறைந்த அளவு நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்யும் தொழில்நுட்பங்களும் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன."

"தமிழக அரசு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் வேளாண்துறை மற்றும் மத்திய அரசு ஆகியவை ஒருங்கிணைந்து இந்த கண்காட்சியில் பங்கேற்கின்றன. சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த கண்காட்சியில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது," என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த கண்காட்சி மூலம் 150 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...