உடுமலையில் 15 நாட்கள் கண்களை கட்டிகொண்டு யோகாசனம் செய்யும் உலகசாதனை நிறைவு

உடுமலையில் யோக ஆசிரியர் குணசேகரன் 15 நாட்கள் கண்களைக் கட்டிக்கொண்டு 360 மணி நேரம் யோகாசனம் செய்து உலக சாதனை படைத்தார். இச்சாதனை ஹை ரேஞ்ச் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் பதிவு செய்யப்பட்டது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மரகதம் யோகாலயம் நடத்தி வரும் யோக ஆசிரியர் குணசேகரன், 15 நாட்கள் கண்களைக் கட்டிக்கொண்டு யோகாசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை முயற்சி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தொடங்கப்பட்டது.

தனியார் திருமண மண்டபத்தில் தொடர்ந்து 15 நாட்கள், 360 மணி நேரம் நடைபெற்ற இந்த சாதனை முயற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, இச்சாதனை ஹை ரேஞ்ச் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் பதிவு செய்யப்பட்டு, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.



இந்த சாதனை குறித்து பேசிய யோக ஆசிரியர் குணசேகரன், "கண்பார்வை இல்லாதவர்களும் யோகாசனம் செய்து ஆரோக்கியம் பெறலாம் என்பதை வலியுறுத்தும் விதமாக கண்களைக் கட்டிக்கொண்டு யோகாசனங்கள் செய்தேன். ஏற்கனவே ஓடும் காரில் யோகாசனம், 4 மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான யோகாசனம் போன்ற சாதனைகளை செய்துள்ளேன். அதன் அடுத்தகட்டமாக, இந்தியாவிலேயே முதல் முறையாக தொடர்ந்து 15 நாட்கள் யோகாசனம் செய்தேன். இந்த சாதனையை பாரத தேசத்திற்கு சமர்ப்பிக்கிறேன்," என்று கூறினார்.

இந்நிகழ்வில் ஹை ரேஞ்ச் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் இந்திய CEO சுமன் பாலே, லண்டன் CEO கே.ஸ்ரீகாந்த், சினேகம் டிரஸ்ட் சுவாமி சுனில்தாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...