பொள்ளாச்சி வடுகபாளையம் ரயில்வே கேட் மூடல்: 50க்கும் மேற்பட்டோர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு

பொள்ளாச்சி வடுகபாளையம் ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்படுவதை எதிர்த்து, நகர மன்ற உறுப்பினர் உமா மகேஸ்வரி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.


Coimbatore: பொள்ளாச்சி நகர மையப்பகுதியில் அமைந்துள்ள வடுகபாளையத்தில் 123 எண் கொண்ட லெவல் கிராசிங் ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்படுவதை தடுக்க கோரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நகர மன்ற உறுப்பினர் உள்ளிட்ட 50க்கு மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர்.

இந்த ரயில்வே கேட், பொள்ளாச்சி மற்றும் கோவை சாலையை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது. கடந்த மூன்று மாதங்களாக ரயில்வே துறையினர் இந்த கேட்டை நிரந்தரமாக மூட முயற்சி மேற்கொண்டு வந்தனர். ஆனால் அப்போது பொதுமக்கள் தொடர்ந்து ஆட்சியர் மற்றும் ரயில்வே நிர்வாகத்திடம் இப்பகுதியில் உள்ள மக்கள் சிரமத்திற்கு உள்ளாவதாகவும், ரயில்வே கேட் நிரந்தரமாக மூடுவதை கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வந்தனர்.



இந்நிலையில், திடீரென நேற்று இந்த ரயில்வே கிராஸ் நிரந்தரமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்குண்டான பணிகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சார்ந்த நகர மன்ற உறுப்பினர் உமா மகேஸ்வரி தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

செய்தியாளரிடம் பேசிய உமா மகேஸ்வரி, "வடுகபாளையம் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த ரயில்வே கேட் பொள்ளாச்சி மற்றும் கோவை செல்வதற்கு பதினாறு கிராமங்களுக்கு வழித்தடமாக இருக்கிறது. இதனால் அன்றாட பணிக்கும் ரேஷன் கடை, மருத்துவமனை, பள்ளிக்கு செல்வதற்கு 6 கிலோமீட்டர் தூரம் வரை சுற்றி செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. மாற்றுப்பாதை பயன்படுத்த ஏதுவாகவில்லை," என்று கூறினார்.

மேலும் அவர், "சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருக்கிறோம். உடனடியாக தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...