தேசிய பழு தூக்கும் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்கள் வென்ற கோவை டாஸ்மாக் ஊழியர்

கோவையைச் சேர்ந்த டாஸ்மாக் ஊழியர் ஈஸ்வரன், ராஜஸ்தானில் நடைபெற்ற தேசிய அளவிலான பழு தூக்கும் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களையும் ஸ்ட்ராங் மேன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்டம் ஈச்சனாரி பகுதியில் வசிக்கும் ஈஸ்வரன் என்பவர் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர், பழு தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று வரும் இவர், சமீபத்தில் ராஜஸ்தானில் நடைபெற்ற தேசிய அளவிலான பழு தூக்கும் போட்டியில் தமிழ்நாடு அணி சார்பாக பங்கேற்றார்.

இப்போட்டியில் தான் பங்கேற்ற மூன்று பிரிவுகளிலும் முதலிடம் பிடித்து மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார் ஈஸ்வரன். மாஸ்டர் பிரிவில் நடந்த பழு தூக்கும் போட்டியில் 455 கிலோ எடையை தூக்கியுள்ளார். பெஞ்ச் பிரஸ் பிரிவில் 105 கிலோ எடையையும், டெட் லிஃப்ட் பிரிவில் 200 கிலோ எடையையும் தூக்கியுள்ளார்.



மூன்று பிரிவுகளிலும் அதிக எடையை தூக்கியதால், ஸ்ட்ராங் மேன் என்ற பட்டத்தையும் வென்றுள்ளார் ஈஸ்வரன். தற்போது நண்பர்களின் உதவியுடன் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ளும் இவர், அரசாங்கமும் தன்னார்வலர்களும் உதவி புரிந்தால் தான் மேலும் உயர முடியும் என்று கூறினார்.

பல்வேறு பணிகள் மற்றும் குடும்ப சூழல் மத்தியிலும் தேசிய அளவில் சாதனை புரிந்த ஈஸ்வரன், தற்போது சர்வதேச அளவிலான போட்டிக்கு தன்னை தயார்படுத்தி வருகிறார்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...