கோவையில் மத ஒற்றுமையைப் பறைசாற்றிய இஸ்கான் தேரோட்டம்..!

கோவையில் இஸ்கான் அமைப்பின் ஜெகன்னாதர் தேரோட்டம் நடைபெற்றது. ஒப்பணக்கார வீதியில் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகிகள் தேரை வரவேற்று, மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: கோவையில் இஸ்கான் அமைப்பு சார்பில் ஜெகன்னாதர் தேரோட்டம் நடைபெற்றது. ஒடிசாவின் புரி ஜெகன்னாதர் கோவிலில் நடைபெறும் தேர் திருவிழாவை முன்னிட்டு இந்த தேரோட்டம் நடத்தப்பட்டது.

தேர்முட்டியில் தொடங்கிய தேரோட்டம், ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி வழியாக மீண்டும் தேர்முட்டி நோக்கிச் சென்றது. ஒப்பணக்கார வீதியில் தேர் சென்ற போது, அத்தார் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகிகள் தேரை வரவேற்றனர். இஸ்கான் அமைப்பினர் பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு பிரசாதம் வழங்கி அன்பை பரிமாறிக் கொண்டனர். இந்த செயல் பார்ப்போரை நெகிழச் செய்தது.



அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய ஜெகன்னாதர், சுபத்ரா தேவி, பலதேவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்த தேரோட்டத்தில் பங்கேற்றனர். தேரோட்டத்தின் போது பக்தர்கள், "ஹரே ராம ஹரே கிருஷ்ணா" என்று பஜனை பாடிக் கொண்டும், பெண்களும் சிறுமிகளும் கும்மியாட்டம் ஆடிக் கொண்டும் சென்றனர்.



பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் இந்த தேரோட்டமானது நடைபெற்றது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனம் தேரைப் பின் தொடர்ந்து சென்றன. இந்த தேரோட்டம் கோவையில் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...