தொண்டாமுத்தூர் நரசீபுரத்தில் காட்டு யானைகள் தொல்லை: வாழை தோட்டங்கள் சேதம்

கோவை தொண்டாமுத்தூர் நரசீபுரம் பகுதியில் காட்டு யானைகள் வாழை தோட்டங்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் வேதனை. விவசாயிகள் வனத்துறையிடம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.


Coimbatore: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள நரசீபுரம் பகுதியில் காட்டு யானைகள் தொடர்ந்து வாழை தோட்டங்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நரசீபுரம் பகுதியில் உள்ள செந்தில்குமார் என்பவரின் விவசாய தோட்டத்திற்குள் நுழைந்த காட்டு யானைகள், 300க்கும் மேற்பட்ட வாழை மரங்களை அழித்துள்ளன. கடந்த 10 நாட்களாக, ஐந்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் இப்பகுதியில் முகாமிட்டு, விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதம் விளைவிப்பது தொடர்கதையாக மாறியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், காட்டு யானைகளை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகளிடம் அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் ஜூலை 13 அன்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், நடவு செய்யப்பட்டு அறுவடைக்கு தயாரான வாழை மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியதால், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

வனத்துறை அதிகாரிகள் இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால், விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...