உடுமலையில் ராணுவ பயிற்சி பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் நடத்திய கலை மற்றும் இலக்கிய போட்டிகள்

உடுமலை அருகே அமராவதி நகர் ராணுவ பயிற்சி பள்ளியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் கலை மற்றும் இலக்கிய போட்டிகள் நடைபெற்றன. பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி நகர் பகுதியில் மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் சைனிக் எனப்படும் ராணுவ பயிற்சி பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் "பிரஜனா" என்னும் கலை இலக்கியப் போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டிகளில் சென்னை, மதுரை, திருப்பூர், கள்ளக்குறிச்சி, அமராவதி நகர் ராணுவ பயிற்சி பள்ளி மற்றும் உடுமலை அரசு மாதிரி பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.



பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, புகைப்படப் போட்டி, ஓவியப்போட்டி, குறும்படம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ், கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. உடுமலை அரசு மாதிரி பள்ளி மாணவர்கள் குறும்படத்திற்கான முதல் பரிசை வென்றனர்.

பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் உடுமலை அமராவதி நகர் ராணுவ பயிற்சி பள்ளி மாணவர்கள் அதிக பரிசுகளை பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமராவதி நகர் ராணுவ பயிற்சி பள்ளி முதல்வர் கேப்டன் நேவி மணிகண்டன் மற்றும் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் பரிசுகளை வழங்கினர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமராவதி நகர் ராணுவ பயிற்சி பள்ளியின் முன்னாள் சமூக அறிவியல் ஆசிரியர் சோமசுந்தரம் பேசுகையில், "தற்பொழுது படிக்கும் மாணவர்கள் சைனிக் பள்ளியின் பெருமையை அனைவரும் அறியும்படி படிக்க வேண்டும். மேலும் மாணவர்கள் அதிகமாக புத்தகம் படித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். புத்தகம் மூலம் ஏராளமான நன்மைகள் உண்டு" என்று கூறினார்.

விழாவில் அமராவதி நகர் ராணுவ பயிற்சி பள்ளி நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்னல் திபு, ஆசிரியர்கள், அமராவதி நகர் ராணுவ பயிற்சி பள்ளி முன்னாள் சங்க நிர்வாகிகள் மேஜர் ஜெனரல் பாபு, கண்ணன், பாலசுப்பிரமணியம், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...