அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: ஒரே நாளில் 8 அடி உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, ஒரே நாளில் 8 அடி உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, துவானம், காந்தளூர், மறையூர் ஆகிய பகுதிகளில் இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் அமராவதி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி, அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,003 கனஅடியாக பதிவாகியுள்ளது. தற்போது அமராவதி அணையின் நீர்மட்டம் 72.67 அடியாக உள்ளது. நேற்று இந்த அளவு 64 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.



ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 8 அடி உயர்ந்துள்ளதால், அமராவதி அணையின் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அமராவதி அணையின் மொத்த நீர்க்கொள்ளளவு 90 அடியாகும். தற்போதைய நீர்மட்டம் 72.67 அடியாக இருப்பதால், அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வதால், விவசாயிகள் இந்த ஆண்டு நல்ல மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். மேலும், அணையின் நீர்மட்டம் உயர்வதால் சுற்றுவட்டார பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...