திருப்பூரில் 'கன்ஸ்ட்ரோ மெகா 2024' கட்டுமான பொருட்கள் கண்காட்சி வரும் 18ஆம் தேதி தொடக்கம்

திருப்பூரில் கட்டட கட்டுமான பொருட்களுக்கான கண்காட்சி 'கன்ஸ்ட்ரோ மெகா 2024' வரும் 18ஆம் தேதி முதல் 4 நாட்கள் நடைபெறுகிறது. 300 அரங்குகளில் புதிய தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்படும்.


Coimbatore: திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பில், வரும் 18ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் நடைபெறும் கட்டட கட்டுமான பொருட்களுக்கான கண்காட்சி திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள வித்யா கார்த்திக் மகாலில் 'கன்ஸ்ட்ரோ மெகா 2024' என்ற பெயரில் நடைபெறுகிறது.

இந்த கண்காட்சி தினமும் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும். இதில் கட்டுமானத்திற்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் 300 அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இது 19வது ஆண்டாக நடத்தப்படும் கட்டுமானப் பொருட்கள் கண்காட்சியாகும்.



கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், "சுமார் 350 கோடி ரூபாய் அளவிலான வர்த்தக விசாரணை இருக்கும் என எதிர்பார்க்கிறோம். நாள்தோறும் புதிய டிசைன்கள், தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருகின்றன. அதற்கேற்ப கட்டட பொறியாளர்கள், வீடு கட்டுவோர் மற்றும் கட்டடம் கட்டும் எண்ணத்துடன் இருப்போர் அனைவருக்கும் கட்டுமான பணி சார்ந்த 'அப்டேட்' ஆக இந்த கண்காட்சியை நடத்துகிறோம்" என்றனர்.

வீடுகளின் முகப்பு கதவு முதல் சமையலறை வரை தேவைப்படும் கட்டுமான பொருட்களின் தற்போதைய புதிய வரவுகள் கண்காட்சியில் இடம்பெறும். மழை நீரை சேகரித்து குடிநீராக மாற்றும் இறக்குமதி தொழில்நுட்பம், மாடுலர் கிச்சன், எடை குறைந்த மெகா சைஸ் டைல்ஸ், செயற்கை மார்பிள், டிஜிட்டல் லாக், பயோ செப்டிக் டேங்க் என இதுவரை கண்டிராத, கற்பனைக்கு எட்டாத தயாரிப்புகள் கண்காட்சியில் இடம்பெறும் என தெரிவித்தனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...