மேட்டுப்பாளையம் பகுதி பேருந்துகளில் போக்குவரத்து அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை-மேட்டுப்பாளையம் பகுதியில் இயங்கும் பேருந்துகளில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். பயணிகளுக்கு பாதுகாப்பான பயணம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


கோவை: கோவை-மேட்டுப்பாளையம் பகுதியில் இயங்கும் பேருந்துகளில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, பயணிகளுக்கு பாதுகாப்பான பயணம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் கணேசன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் தலைமையிலான அதிகாரிகள் குழு, ஜூலை 17 அன்று காரமடை டீச்சர்ஸ் காலனி அருகே சோதனை நடத்தினர். மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி செல்லும் தனியார் பேருந்துகள் மற்றும் கிராமங்களுக்கு இயக்கப்படும் மினி பேருந்துகள் ஆகியவற்றில் இந்த திடீர் ஆய்வு நடைபெற்றது.

ஆய்வுக்குப் பின்னர், அதிகாரிகள் பயணிகளிடம் முக்கிய அறிவுரைகளை வழங்கினர். பேருந்து ஓட்டுனர்கள் அதிவேகமாக ஓட்டுதல், செல்போனில் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்குதல், நடத்துனர் பயணிகளை படியில் தொங்கும்படி அனுமதித்தல், ஏர் ஹாரன் அல்லது மியூசிக்கல் ஹாரன் பயன்படுத்துதல், போநட் (Bonnet) அதாவது என்ஜின் மேற்பகுதியில் யாரையாவது அமரவைத்து செல்லுதல் போன்ற விதிமீறல்களை கண்டால், பயணிகள் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து RTO அலுவலகத்திற்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டனர். இவ்வாறு புகார் அளித்தால் ஒரு மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...