தாராபுரத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லானின் 219வது நினைவு தினம் அனுசரிப்பு

தாராபுரத்தில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலையில் சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லானின் 219வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அமைச்சர் பொல்லானின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லானின் 219வது நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அமைச்சர் பொல்லானின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மூன்று நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கயல்விழி, பொல்லானின் தியாகங்களை நினைவு கூர்ந்தார். "கொங்கு மண்டலத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து தீரன் சின்னமலையுடன் இணைந்து போரிட்டவர் மாவீரர் பொல்லான். பிரிட்டிஷ் ராணுவ ரகசியங்களை மாறுவேடத்தில் தீரன் சின்னமலைக்குக் கொண்டு வந்து சேர்த்தார். 1801 காவிரி கரைப்போர், 1802 அரச்சாலையூர் போர், 1804 ஓடாநிலை போர்களில் தீரன் சின்னமலையின் வெற்றிக்கு பொல்லான் முக்கிய பங்கு வகித்தார்" என்று அவர் குறிப்பிட்டார்.



அமைச்சர் மேலும் தொடர்ந்து, "பிரிட்டிஷ் ராணுவத்தினர் ஆடி 1ம் தேதி அரச்சலூரை அடுத்த நல்லமங்காபாளையத்தில் பொல்லானைத் தலைகீழாகக் கட்டிக் கொன்றனர். அரச்சலூர் நல்லமங்காபாளையத்தில் இன்று நடைபெறும் பொல்லானின் 219வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் முத்துசாமி, மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ், ஈரோடு எம்.பி. பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்துகின்றனர்" என்றார்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திமுகவினர் மற்றும் தமிழ் புலி கட்சியினர் செய்திருந்தனர். மாவட்ட வழக்கறிஞர் அமைப்பாளர் செல்வராஜ், தமிழ் புலிகள் கட்சியின் மேற்கு மண்டல துணைச் செயலாளர் ஒண்டிவீரன், திமுக மகளிர் அணி அமுதா, ஆரோன் செல்வராஜ், ஆதிதிராவிட நலத்துறை உறுப்பினர் சிவசங்கர் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...