அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தலைமையில் தாராபுரம் நஞ்சியம்பாளையத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

திருப்பூர் மாவட்டம் நஞ்சியம்பாளையத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தலைமையேற்று, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நஞ்சியம்பாளையம் ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தலைமை வகித்தார்.



இந்நிகழ்வில் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் எஸ்.வி செந்தில்குமார், பொன்னாபுரம் வட்டார தலைமை மருத்துவர் டாக்டர் தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தனது உரையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். மகளிருக்கான இலவச பேருந்து சேவை, மாதாந்திர ஊக்கத்தொகை ரூ.1000, அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் போன்றவற்றை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார். மேலும், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.



இந்த மருத்துவ முகாமில், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு மருந்து பெட்டகம், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் ஆகியவை வழங்கப்பட்டன.



மேலும், அனைத்து விதமான நோய்களுக்கும் மருந்துகள் மற்றும் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.



இந்நிகழ்வில் நஞ்சியம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் ரஜினிகாந்த், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...