தாராபுரம் அருகே மூலனூரில் நடைபெற்ற முதலாம் ஆண்டு ரேக்ளா பந்தயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மூலனூரில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ் பந்தயத்தை துவக்கி வைத்தார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பேரூராட்சி திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு ரேக்ளா பந்தயம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த ரேக்ளா பந்தயத்தை காலை ஏழு மணி அளவில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

இந்த ரேக்ளா பந்தயம் 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் என இரு பிரிவுகளாக நடைபெற்றது. திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலை, ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800-க்கும் மேற்பட்ட ரேக்ளா மாட்டு வண்டிகள் பங்கு பெற்றன.



முதலில் நடைபெற்ற 200 மீட்டர் ரேக்ளா பந்தயத்தில் ஏராளமான காளைகள் சீறி பாய்ந்தன. 200 மற்றும் 300 மீட்டர் ரேக்ளா போட்டிகளில் வெற்றி பெற்ற ரேக்ளா பந்தய வீரர்களுக்கு கோப்பைகள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இந்த நிகழ்வு மூலனூர் பகுதியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...