கோவையில் டிஜிட்டல் டீடாக்ஸ் குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான்

கோவையில் டிஜிட்டல் சாதனங்களின் அதீத பயன்பாட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 3 கிலோமீட்டர் தூரம் வாக்கத்தான் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை ஆர்.எஸ்.புரம் சாஸ்திரி மைதானத்தில் இருந்து துவங்கி, ஆர்.எஸ்புரம் மற்றும் வடகோவை வழியாக 3 கிலோமீட்டர் தூரம் டிஜிட்டல் டீடாக்ஸ் (Digital Detox) குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது.

இந்த வாக்கத்தானில் கல்லூரி மாணவர்கள், மாணவிகள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் மொபைல் போன், டிவி, கம்ப்யூட்டர் போன்ற டிஜிட்டல் சாதனங்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதகமான விளைவுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த வாக்கத்தானின் நோக்கமாகும்.

தற்போது டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்துள்ளதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் டிஜிட்டல் சாதனங்களுக்கு அடிமையாகி விட்டனர். இதனால் பெரும் அளவில் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில், டிஜிட்டல் சாதனங்களை நமது தேவைக்கேற்ப பயன்படுத்தாமல் அதிகளவில் பயன்படுத்துவதால் பல்வேறு மன உளைச்சல்கள் மற்றும் பிரச்சினைகளை இன்றைய தலைமுறையினர் எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த விழிப்புணர்வு வாக்கத்தானில் கலந்து கொண்ட 500க்கும் மேற்பட்டோர் ஒரே மாதிரியான உடை அணிந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். டிஜிட்டல் சாதனங்களை அளவோடு பயன்படுத்தினால் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது என்ற செய்தியை மக்களிடம் கொண்டு சேர்த்தனர்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...